Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2023 19:10:39 Hours

இலங்கை சிங்கப் படையணியில் படைவீரர்கள் தின கொண்டாட்டம்

இலங்கை சிங்கப் படையணி சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜாலிய நம்முனி (ஓய்வு) ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ உட்பட இலங்கை சிங்கப் படையணி முன்னாள் படைவீரர்கள் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரின் அரிய ஒன்றுகூடல் அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 6) நடைப்பெற்றது.

‘ரெட்ரோஸ்பெக்ட் ஆப் லெஜெண்ட்ஸ்’ என பெயரிடப்பட்ட அன்றைய நிகழ்வு படையணி தலைமையக நினைவுத்தூபியில் உயிரிழந்த அனைத்து இலங்கை சிங்க படையணி போர்வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் ஆரம்பமானது. சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜாலிய நம்முனி (ஓய்வு) ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ அவர்களின் பிறந்தநாளும் அதே நாளில் (செப்டம்பர் 6) இடம்பெற்றதுடன் முதலில் அவர் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை சிங்க படையணி படைத்தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்த அரிய சந்திப்பின் போது இலங்கை சிங்க படையணி நடனக் குழுக்கள் வண்ணத்தையும் கவர்ச்சியையும் சேர்த்ததால் இந்த நிகழ்வு மிகவும் வண்ணமையமாக மாறியது.

இலங்கை சிங்க படையணி நிலைய தளபதி சிஎஸ் திப்பொட்டுகே அவர்கள் இந் நிகழ்வை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்ததுடன் இது அவர்களின் பதவிக்காலத்தில் இலங்கை சிங்க படையணிக்கு பெருமையும் கண்ணியமும் ஏற்படுத்திய ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு அழியாத நினைவுகளைச் சேர்த்தது.

அதேவேளை இளநிலை இலங்கை சிங்க படையணி அதிகாரிகள் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இலங்கை சிங்க படையணிக்கு விலைமதிப்பற்ற சேவையை ஆற்றிய சிரேஷ்ட அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் பரிமாறிக் கொள்வதற்கும் பாக்கியம் கிடைத்தது.