11th September 2023 19:40:13 Hours
யாழ். குடாநாட்டில் உடுவில் பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமைகளை விடுவிப்பதற்காக 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெளிநாட்டு இராணுவ வீரர் மேஜர் ஜெனரல் ரவிரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் நிதியுதவியுடன் புதன்கிழமை (செப். 6) கிராம மக்களிடையே 50 உலர் உணவு பொதிகளை வழங்கினர்.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுபி வஜிரவெலகெதர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிக்காட்டல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டிஏ அஹமத் ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 51 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு கேணல் டபிள்யூஎஸ்ஆர் குமார மற்றும் 9 வது (தொ) இலங்கை இலோசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுமார் 5000/= பெறுமதியான ஒவ்வொரு உலர் உணவு பொதியிலும் அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, பால் மா, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் இருந்தன.