Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2023 21:56:52 Hours

இராணுவ பொறியியல் படைப்பிரிவினரால் ஹோமாகம மத்திய கல்லுரியின் மாணவ தலைவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

ஹோமாகம மத்திய கல்லூரியின் 119 சிரேஷ்ட மாணவ தலைவர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட முழு நாள் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க வியாழக்கிழமை (07) மத்தேகொட இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களின் தலைமைத்துவ குணங்கள், குழுப்பணி மற்றும் குழுவை உருவாக்கும் திறன்கள், ஆளுமை மற்றும் சமூக நெறிமுறைகளை மேலும் மேம்படுத்துவதற்கு இத் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் நடைப்பெற்றது.

நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தலைமைத்துவத் திட்டமானது இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக தலைமைத்துவத்தின் நடைமுறைப் பண்புகளில் வெற்றியைப் பெறுவதற்காக கற்பித்த பாடங்கள் மற்றும் மதிப்புமிக்க அனுபவங்கள் பற்றிய விரிவுரைகள், உள்ளக மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் செயல்விளக்கங்களை உள்ளடக்கியிருந்தது.

இத்திட்டத்தின் இறுதியில் மாணவ தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் ஹோமாகம மத்திய கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.பி.ஆதிஹெட்டி அவர்களுடன் பிரதம அதிதியாக இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதியும் கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.