09th September 2023 21:52:23 Hours
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியான மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.ஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் படையினரின் நல்வாழ்வு குறித்து அறிவதற்காக 611, 612, 613 வது காலாட் பிரிகேட்கள் மற்றும் அதன் கட்டளையின் கீழ் உள்ள படையலகுகளுக்கு ஓகஸ்ட் 24,25 மற்றும் 31 ஆம் திகதிகளில் தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அன்புடன் வரவேற்றனர். தொடர்ந்து விரிவான விளக்க கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட பின்னர் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் நினைவு சின்னமாக முகாம் வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினார்.
மேலும், அவர் முகாம்களுக்குச் சென்று நடைபெற்று வரும் கட்டுமானங்களை பார்வையிட்டதுடன் சிப்பாய்களின் நலம் குறித்து கேட்டறிந்தார். புறப்படுவதற்கு முன் அவர் ஒவ்வொரு இடத்திலும் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை பதிவிட்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயங்களுடன் இணைந்திருந்தனர்.