09th September 2023 21:48:45 Hours
புதிதாக நியமிக்கப்பட்ட 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் செவ்வாய்கிழமை (செப். 05) விசுவமடு 553 வது காலாட் பிரிகேடிக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
553 வது காலாட் பிரிகேடின் கீழ் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்வதனை தொடர்ந்து 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையலகுகளுக்கு விஜயம் செய்தார். வருகை தந்த தளபதியினை 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிஜீஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ அவர்கள் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து வரவேற்றார்.
பின்னர், பிரிகேடின் பொறுப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கத்தை அவர் கேட்டரிந்த தளபதி படையினருக்கு உரையாற்றுகையில் படையினரின் கடமையில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன் அந்தந்த படையலகுளின் தரத்தை உயர்த்துவதற்கு சிப்பாய்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
அந்த நாளை நினைவுபடுத்தும் வகையில், சில குழு படங்களை எடுத்துகொண்டதுடன் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். மேலும், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது தளபதி படையினர்களுடன் உரையாடினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.