09th September 2023 11:15:03 Hours
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 8) யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை தொழிற்சாலைக்கு இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுடன் விஜயம் செய்தார்.
தொழிற்சாலை வளாக நுழைவாயிலில் அன்றைய பிரதம விருந்தினருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு, போர் கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டப்ளியு எம் ஆர் டப்ளியு டப்ளியு எச் ஜே பி வனிகசேகர யுஎஸ்பீ மற்றும் விருந்தினர்களை ரணவிரு ஆடைதொழிற்சாலை தளபதி பிரிகேடியர் எம்ஜிஏஎன்பி மாஹாதுவக்கார ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
ரணவிரு ஆடைதொழிற்சாலை தளபதி சிறிது நேரம் கழித்து வருகை தந்த அமைச்சருக்கு ரணவிரு ஆடைதொழிற்சாலை யக்கலையின் செயல்பாட்டு அம்சம் பற்றிய விரிவாக விளக்கமளித்தார்.
பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தொழிற்சாலை வளாகத்தை ஆய்வு செய்துடன் அங்கு அவர் ரணவிரு ஆடைதொழிற்சாலையில் பணிபுரியும் படையினருடன் உரையாடினார்.
அன்றைய நிகழ்ச்சி நிரலின் முடிவில் அமைச்சருக்கு ரணவிரு ஆடைதொழிற்சாலை தளபதி நினைவுச் சின்னத்தை வழங்கினார்.