08th September 2023 15:57:59 Hours
விஷேட படையணியின் மேஜர் ஜெனரல் எச் டி டப்ளியு கே என் ஏரியகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்கள் 58 வது காலாட் படையணியின் புதிய தளபதியாக மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பெற்றார்.
58 வது காலாட் படைப்பிரிவின் புதியதளபதி பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதை வழங்குவதற்கு முன்னர் தளபதிக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து புதிய தளபதி அவரது அலுவலகத்தில் மகா சங்க உறுப்பினர்களின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் அவரது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். சிறிது நேரம் கழித்துஅவர் படைப்பிரிவு தலைமையகத்தில் படையினர்களுக்கு உரையாற்றினார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 58 வது காலாட்படை பிரிவின் பணிநிலை அதிகாரிகள்,கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.