07th September 2023 16:53:41 Hours
இராணுவ தலைமையக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கேணல் எச்டிஜேபீ வீரதுங்க அவர்கள் 2023 புதன்கிழமை (செப்டெம்பர் 06) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த பணிப்பாளரை பதில் கேணல் தகவல் தொழில்நுட்பம் லெப்டினன் கேணல் டபிள்யூ.ஆர்.எம்.ஆர் விக்கிரமசிங்க யுஎஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
புதிய பணிப்பாளர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, ‘செத் பிரித்’பராயணங்களுக்கு மத்தியில் தனது புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டார்.அவர் பதவியேற்றதனை தொடர்ந்து பணிப்பகத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார்.
புதிய பணிப்பாளர் கேணல் எச்டிஜேபீ வீரதுங்க அவர்கள் இந் நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவ சமிக்ஞை பிரிகேடின் தளபதியாக பணியாற்றினார்.
அவர் இப்போது வெளிநாட்டு பணிப்பக பணிப்பாளராக பெறுப்பேற்றுள்ள பிரகேடியர் ஜிஎல்எஸ்டப்ளியு லியனகே யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு பதிலாக இப் பதவியை ஏற்றுள்ளார்.
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.