07th September 2023 17:05:35 Hours
யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ் ஆர்கே ஹெட்டியாரச்சி ஆர்டப்ளயுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீஎன்டியு பீஎஸ்சி அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியாக பதவியேற்றதனை தொடர்ந்து படையலகுகளுக்கான முதல் விஜயத்தினை மேற்கொண்டார்.
செப்டம்பர் 2-4திகதிகளில் மேஜர் ஜெனரல் எஸ் ஆர்கே ஹெட்டியாரச்சி ஆர்டப்ளயுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீஎன்டியு பீஎஸ்சி அவர்கள் தம்புள்ளை, மொல்லிப்பொத்தானை, மனம்பிட்டிய மற்றும் பல்லேகல பகுதிகளில் உள்ள 4, 15, 19 மற்றும் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளுக்கு விஜயம் செய்தார். வருகை தந்த படைத்தளபதி அவர்களுக்கு தற்போதைய பங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்குவதற்கு முன், அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் தங்கள் படைத்தளபதியை அன்புடன் வரவேற்றனர்.
மேஜர் ஜெனரல் எஸ் ஆர்கே ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீஎன்டியு பீஎஸ்சி அவர்கள் ஒவ்வொரு படையலகிலும் படையினருக்கு உரையாற்றியதுடன் ஒவ்வொரு முகாம் வளாகத்திற்கும் முறையான விஜயத்தின் போது படையினருடன் சுமுகமான உரையாடலை மேற்கொண்டார்.
இலேசாயுத காலாட் படையணி தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகளும் இந்த விஜயத்துடன் இணைந்திருந்தனர்.