31st July 2023 19:42:37 Hours
செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) 'சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்' மேம்பட்ட போக்கைப் பின்பற்றிய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் செயலர்வு ஒன்று நடாத்தப்பட்டது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 33 அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்பற்றினர்.
இதேவேளை, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம், இலங்கை இலேசாயுத காலாட்படையணி தலமையகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 27) அன்று 'சர்வதேச மனிதாபிமானச் சட்டம்' தொடர்பான உயர்தரப் பாடநெறியைப் பின்பற்றிய அதிகாரிகளுக்கு இதே தலைப்பில் விரிவுரையை நடாத்தியது.
இந்த செயலமர்வில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 45 அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விரிவுரைகள் பெரும்பாலும் 'சர்வதேச மனிதாபிமான சட்டம்' மற்றும் 'மனித உரிமைகள்' பற்றிய மேம்படுத்தப்பட்ட விவரங்களில் கவனம் செலுத்தப்பட்டது.