19th July 2023 18:53:47 Hours
அக்கரைப்பற்று தர்மரதன சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம விகாரையின் தம்ருவான் பாலர் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் 100 பிள்ளைகளுக்கு சீன மக்கள் குடியரசில் உள்ள சீன பௌத்த விகாரைகள் மற்றும் சீன பௌத்தர்களால் சுமார் தலா ரூ. 5100.00 பெறுமதியான உலர் உணவு பொதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, 241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோரின் ஒருங்கிணைப்பின் மூலம் சனிக்கிழமை (ஜூலை 15) இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம விகாரையின் பிரதமகுருவான வண.தேவகொட சோரத தேரரின் ஆசிர்வாதத்துடன் திரு நிஷாந்த விதாரண மற்றும் திரு உதய கருணாரத்ன ஆகியோரால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 241 வது காலாட் பிரிகேடின் படையினரால் இந்த வழங்கல் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அரிசி, பருப்பு, சீனி, பால் மா, நூடுல்ஸ், டின் மீன், கோதுமை மா போன்றவை நிவாரணப் பொதிகளில் காணப்பட்டன.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த வழங்கல் நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.