19th July 2023 19:04:41 Hours
மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டிடபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் குண்டாசாலை 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) கடமைகளை பொறுப்பேற்றார்.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியை பணிநிலை அதிகாரிகள் வரவேற்றதுடன் 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதன் பிறகு, புதிய தளபதி தனது புதிய அலுவலகத்தில் கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டதுடன், வளாகத்தில் ஒரு மாங்கன்றினையும் நட்டு வைத்தார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க புதிய தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார், தளபதியின் உரையில் எதிர்காலத்தில் படைப்பிரிவுக்கான தனது கருத்துக்களை முன் வைத்தார். இந்நிகழ்வின் போது 11 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.