20th July 2023 20:50:58 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யுடபிள்யுஎச்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் தனது புதிய நியமனத்தின் பின்னர் ஜூலை 15 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு விஜயம் செய்தார்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, நுழைவாயிலில் இலங்கை இலேசாயுத காலாட் படையினரினால் வருகை தந்த புதிய மத்திய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், மத்திய தளபதி இராணுவ கல்வியற் கல்லூரியின் போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டபிள்யுபீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள், மேஜர் ஜெனரல் டபிள்யுடபிள்யுஎச்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களை பயிலிவள் அதிகாரி பயிற்சியில் இருக்கும் அதிகாரிகளுக்கு உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தார்.
அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில், இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டபிள்யுபீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் வருகை தந்திருந்த மேஜர் ஜெனரல் டபிள்யுடபிள்யுஎச்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களின் விஜயத்திற்காக நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார்.
அவர் புறப்படுவதற்கு முன்னர் இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிதி பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.