Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2023 21:41:22 Hours

கிழக்குப் படையினரால் ஹபரணை காட்டுத் தீ அணைப்பு

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 7 வது மற்றும் 5 வது (தொ) இராணுவ பீரங்கி படையணி, 5 வது இராணுவ மருத்துவ படையணி மற்றும் 3 வது இராணுவ போர் கருவி படையணியின் 7 அதிகாரிகள் மற்றும் 140 சிப்பாய்கள், புதன்கிழமை (ஜூலை 19) தலபத்கந்த, ஹதரஸ்கொட்டுவ காட்டுப் பகுதியில் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெரிய மரங்கள், செடிகொடிகள், காட்டு புதர்கள் என பரவிய காட்டுத் தீயை விரைவாக அணைத்துள்ளனர்.

ஹபரணையில் காட்டுத் தீ பரவிய சில நிமிடங்களில் இராணுவத்தினரின் உதவியை நாடிய ஹபரணை வன அதிகாரிகள், இலங்கை விமானப்படையினருடன் 147 இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

22 மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் 222 மற்றும் 231 காலாட் பிரிகேட் தளபதிகள் வேகமாக பரவிய தீயை அணைக்க தங்கள் படையினருக்கு வழிகாட்டினர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டதுடன், படையினரின் பணி மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களை பாராட்டினார்.