Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2023 21:15:32 Hours

தர்ம பிரசங்கத்தில் 500 க்கும் மேற்பட்ட கிழக்கு படையினர் பங்கறே்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'அம டோர விவரவிய' தர்ம பிரசங்கத் திட்டத்தில் இராணுவத் படையினர்களிடையே மன சமநிலை மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வெலிகந்த கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2023 ஜூலை 18 அன்று தர்ம பிரசங்கம் நடத்தப்பட்டது.

இராணுவ பௌத்த சங்கத்தின் அழைப்பின் பேரில், தலைமையக விகாரை வளாகத்தில் பூர்வாங்க வழிபாடுகள் மற்றும் சமய அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தலைமையகத்திற்கு சேவையாற்றும் நூற்றுக்கணக்கான படையினர்களுக்கு வண.பலங்கொட ராத தேரரால் 'தர்ம' பிரசங்ம் நடாத்தப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் இந் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 500 இற்கும் மேற்பட்ட சிப்பாய்களுடன் ஆன்மீக முன்னேற்றத்திற்கான 'தம்ம' பிரசங்கத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு கூடியிருந்தனர்.