Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2023 17:23:49 Hours

வெளியேறும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது சப்தர் கான் அவர்கள் இலங்கையில் அவரது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்கு முன்னர் புதன்கிழமை (ஜூலை 5) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பொதுவான நலன்கள் மற்றும் இரு இராணுவ அமைப்புகளுக்கும் இடையே உள்ள இருதரப்பு உறவுகள் தொடர்பாக இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கேணல் முஹம்மட் சப்தர் கான் தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தில் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கை இராணுவத்தின் எதிர்கால முயற்சிகளுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

உரையாடல்களின் முடிவில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மட் சப்தர் கான் ஆகியோர் உறவுகள் மற்றும் நல்லெண்ணங்களைப் பாராட்டி, பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.