05th July 2023 13:48:12 Hours
அண்மையில் நியமனம் பெற்ற தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜஎஸ் செனரத் யாப்பா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதிய அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (04) சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இருவரும் நிர்வாகம் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தின் இடமான தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடினர்.
வருகை தந்திருந்த தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி இராணுவத் தளபதியின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததோடு, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் எதிர்கால முயற்சிகளில் இராணுவத்துடன் நெருக்கமான தொடர்பில் இருக்க விருப்பம் தெரிவித்தார்.
இறுதியில், இராணுவத் தளபதியினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் டிஜஎஸ் செனரத் யாப்பா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2023 மார்ச் 16 தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பதில் தளபதியாக நியமிக்கப்பட்டார், பின்னர் அவர் 2 ஜூன் 2023 அன்று ஓய்வு பெற்றவுடன் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதியாக கடமை பொறுப்பேற்க மீண்டும் அழைக்கப்பட்டார். இவர் இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.