Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2023 20:07:01 Hours

65 வது படைப்பிரிவு தளபதிக்கு பிரியாவிடை

பதவி விலகும் 65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஈஎடிபீ எதிரிசிங்க பீஎஸ்சி அவர்களுக்கு துணுக்காயில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) 65 வது காலாட் படைப்பிரிவினர் பிரியாவிடை நிகழ்வை நடாத்தினர்.

இராணுவ சம்பிரதாயங்களின்படி, பதவி விலகும் படைப்பிரிவு தளபதிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கியதுடன், அவர் தனது வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இறுதியுரையும் ஆற்றினார். இந் நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், படைப்பிரிவின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

தனது பிரியாவிடைக்கு முன்னர், அவர் 651, 652, 653 வது காலாட் பிரிகேட்கள் மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 4 வது கஜபா படையணி, 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளுக்கு மரியாதை நிமித்தமாக விஜயம் செய்தார்.

மேஜர் ஜெனரல் ஈஎடிபீ எதிரிசிங்க பீஎஸ்சி அவர்கள் புகழ்பெற்ற பணியின் பின்னர் இராணுவத்தில் இருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கின்றார்.