21st June 2023 19:48:18 Hours
புத்தளம் 143 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன் உணவகம் அண்மையில் நிர்மாணிக்கப்பட்டதன் ஊடாக அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் நீண்ட நாள் தேவை நிறைவேற்றியுள்ளது.
143 வது காலாட் பிரிகேட் தலைமையகம், 16 வது கஜபா படையணி மற்றும் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் உயர் தொழில்நுட்ப தரத்துடன் 16 மாதங்களில் இந் நிர்மாணிப்பு பணியை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எப் கிச்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.
143 காலாட்படை படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்களுக்கு நவீன மற்றும் வசதியான வாழ்க்கை இடத்தை வழங்கும் நோக்கத்துடன், பிரிகேடியர் டீஎம்எப் கிச்சிலன் ஆர்டப்ளிபீ ஆர்எஸ்பீ அவர்களால் இத்திட்டம் 2022 பெப்ரவரியில் தொடங்கப்பட்டது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த சார்ஜென்ட் உணவறை ஒரு விசாலமான சாப்பாட்டு அறை மற்றும் டிவி அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது 143 வது காலாட் பிரிகேட்டின் பயனர்களுக்கு வசதியான மற்றும் நிதானமான சூழலை வழங்குகிறது.