Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2023 18:13:57 Hours

221 வது காலாட் பிரிகேடிற்கு 13 வது 'பிறந்தநாள்'

221 வது காலாட் பிரிகேட் தலைமையகம் தனது 13வது ஆண்டு நிறைவை மார்ச் 12-17 வரை திருகோணமலை 221 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல நிகழ்வுகளை நடாத்தி கொண்டாடியது.

பிரிகேட் தளபதி மற்றும் பிரிகேடின் அனைத்து நிலையினர்களும் மார்ச் 13 அன்று, திருகோணமலை கோகண்ண ராஜா மகா விஹாரையில் 'போதி பூஜை' நடத்தி, 'மஹா சங்க' உறுப்பினர்களுக்கு 'ஹீல் தானய' (காலை உணவு) எனும் அன்னதானமும் வழங்கினர். மேலும் அன்று மாலை திருகோணமலை கோணேஸ்வரம் கோவில் மற்றும் கல் தேவாலயத்தில் சமய வழிபாடுகளையும் நடாத்தினர்.

ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வானது 16 மார்ச் 2023 அன்று நடாத்தப்பட்டது, இதில் சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை 221 வது காலாட் பிரிகேட் தளபதிக்கு வழங்கப்பட்டது.

அதன்பின்னர், பிரிகேட் தளபதி அவர்கள் பிரிகேட் வளாகத்தில் மரக்கன்றினை நட்டு, அனைத்து நிலையினருடன் மதிய உணவில் கலந்துகொண்டதுடன், அங்கு அவர் பிரிகேட் படையினருக்கு உரையாற்றினார்.