20th March 2023 18:17:05 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது 25 வது வெள்ளி விழாவை சனிக்கிழமை (18 மார்ச் 2023) வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
இராணுவ சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, 4 வது கஜபா படையணியின் படையினரால் வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னமாக முகாம் வளாகத்தினுள் சந்தன மரக்கன்றினை தளபதி அவர்கள் நட்டதுடன், ஆண்டு நிறைவை முன்னிட்டு பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழுப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
பின்னர், அவர் படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருடன் மதிய உணவு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். பிரிகேடியர் பொதுப்பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.