22nd March 2023 21:35:58 Hours
விஜயபாகு காலாட் படையணியினை சேர்ந்த பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்க அவர்கள் மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக திங்கட்கிழமை (மார்ச் 20) சமய அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
புதய தளபதியை இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் குமார ரணதுங்கமகே அவர்கள் வரவேற்றதனை தொடர்ந்து காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. மத அனுஷ்டானங்களை தொடர்ந்து தளபதி தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டார். அதன் பின் அந்நாளின் நினைவாக இராணுவ பயிற்சி பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை தளபதி நாட்டினார்.
இந்த நியமனத்திற்கு முன்னர், பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்க விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமையாற்றினார். 68 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரிமுதலிக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.