25th March 2023 21:18:35 Hours
மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) கள விஜயத்தின் தொடர்ச்சியாக பதுளையில் உள்ள 112 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தையும் புத்தன்கோட்டையில் உள்ள 2 வது இலங்கை ரைபிள் படையணி முகாமுக்கும் விஜயம் செய்தார்.
வருகை தந்த தளபதியை 112 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துமிந்த தயவன்ச மற்றும் 2 வது இலங்கை ரைபிள் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏஎம்ஏஎன்கே வெலிகேபொல வரவேற்றார். விஜயத்தின் முதன் நிகழ்வாக 112 வது காலாட் பிரிகேட் தலைமையக வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்றையும் 2 வது இலங்கை ரைபிள் படையணி வளாகத்தில் மாங் கன்று ஒன்றினையும் நடுவதற்கு தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பின்னர் இரு இடங்களையும் தளபதி தீவிரமாக ஆய்வு செய்ததுடன் இராணுவ படையினர்களின் நலம் விசாரித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.