Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2023 17:00:57 Hours

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படைத் தளபதிக்கு பிரியாவிடை

ஓய்வு பெற்று செல்லும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்களுக்கு வியாழக்கிழமை (மே 18) பொல்லஹெங்கொட இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியில் அவருக்கு பாராட்டு மற்றும் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

அவருக்கு படையணித் தலைமையக அணிநடை சதுக்கத்தில் அணிவகுப்பு மரியாதை மற்றும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளின் உணவகத்தில் படம் எடுத்துக் கொண்டதுடன், தேனீர் விருந்திலும் கலந்து கொண்டு படையினருக்கு உரையாற்றினார். பின்னர் அவர் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படையினருக்கும் முன்னாள் படைத் தளபதிகளுக்கும், அனைத்து படையினர்களுக்கும் தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அபாலிஸ் படையணி அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியார் பங்குபற்றியதுடன், ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்களுக்கு பிரியாவிடை உரையாற்றிய ஒழுக்க பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசீஏ த சொய்சா யூஎஸ்பீ எச்டீஎம்சீ எல்எஸ்சீ அவர்கள் ஓய்வுபெறும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியின் சேவைக்கும் அவரின் சாதனைகளுக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துகொண்டார். பதிலுக்கு, மேஜர் ஜெனரல் ஏ.எல்.இளங்ககோன் அழியாத நினைவுகளை நினைவுகூர்ந்ததோடு, தனது பதவிக்காலத்தில் அனைத்து தரப்புகளும் செய்த அனைத்து நல்ல பணிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஒழுக்க பணிப்பாளர் நாயகம், பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலர் தொடர் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.