22nd May 2023 16:00:03 Hours
ஓய்வு பெறுவதற்கு முன்னர், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படை தளபதியும் மற்றும் முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்கள் 5 மற்றும் 6 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணிக்கு அண்மையில் விஜயம் செய்து படையினரைச் சந்தித்தார்.
அவரின் வருகையை தொடர்ந்து 5 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம் சுத்தாகல அவர்கள் பிரதான நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் முகாம் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கு முன் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படம் எடுத்தல் மற்றும் உரையாற்றல் இந்த நிகழ்விற்கு மேலும் முக்கியத்துவம் சேர்த்தது. அத்துடன் கோப்ரல் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் படைத் தளபதி கலந்து கொண்டார்.
இதற்கிடையில், மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அண்மையில் முல்லைத்தீவில் உள்ள 6 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணிக்கு இதேபோன்ற உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார், அங்கு அவருக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 6 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரியால் வரவேற்கப்பட்டார்.
அவர் படையினருக்கு உரையாற்றுவதற்கும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் முன்னர், 5 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியில் சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்றன.