Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2023 18:36:13 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் புதிய தளபதி பதவி ஏற்பு

இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எசிஎ த சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சிஎல்எஸ்சி அவர்கள் கொழும்பு 5. பொல்ஹெங்கொடையில் உள்ள இராணுவ பொலிஸ் படையணியில் திங்கட்கிழமை மே 22 சமய அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ பொலிஸ் படையணியின் 11 வது படைத் தளபதியாக பதவியேற்றார்.

பிரதம அதிதியை இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எஎம்ஆர் அபேசிங்க அவர்கள் படையணி தலைமையகத்திற்கு வரவேற்றதுடன், இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அணிவகுப்பு சதுக்கத்தில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர் குழு படம் எடுத்துக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பல அதிகாரிகள் முன்னிலையில் மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பராயணங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

நிகழ்வின் நினைவாக புதிய படைத் தளபதி வளாகத்தில் மரக்கன்றை நட்டுவைத்ததுடன். படையினருக்கு உரையாற்றுகையில் படையணியின் எதிர்காலம் தொடர்பாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரிகளிடம் உரையாடுவதற்கு முன், நிகழ்வுகளின் பங்கேற்காத அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு வெப்காஸ்டிங் (இணையம் ஊடாக ) மூலம் உரையாற்ற அவர் தனது நேரத்தை எடுத்துக் கொண்டார்.

இந் நிகழ்வில் இலங்கை பொலிஸ் படையணியின் நிலைய தளபதி, பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸ் படையணியின் சிப்பாய்கள் பலரும் பங்கேற்றனர்.