Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2023 20:01:25 Hours

பாகிஸ்தான் கடற்படை பிரதானி இராணுவத் தளபதியை சந்திப்பு

நான்கு நாள் நீண்ட நல்லெண்ணப் பயணமாக தற்போது இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜாத் கான் நியாசி, அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை திங்கட்கிழமை (27) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த பாகிஸ்தான் கடற்படை பிரதானியை, இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தலைமையக பிரிகேட் தளபதி கேணல் டி.கே.ஆர் பெரேரா அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர், இராணுவ சம்பிரதாய நிகழ்வாக வருகை தந்த கடற்படை பிரதானிக்கு இலங்கை பீரங்கிப் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்கிரமசிங்க ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ என்.டி.யூ பீ.எஸ்.சி, அவர்கள் அன்றைய பிரதம அதிதியான அம்ஜாத் கான் நியாசி, அவர்களை அணிவகுப்பு மரியாதைக்கு அழைத்துச் சென்றார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வருகை தந்த பாகிஸ்தான் கடற்படை பிரதானியை இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்றார்.

அதன் பின்னர், அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும், வருகை தந்த கடற்படைத் பிரதானியுடன் இணைந்து, இராணுவத் தலைமையகத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் நினைவுகளைச் சேர்க்கும் வண்ணம் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கை இராணுவம் மற்றும் பாகிஸ்தான் கடற்படை ஆகிய இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்தமைக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், வருகை தந்த பாகிஸ்தான் கடற்படை பிரதானி, தளபதியின் அலுவலகத்தில் உள்ள அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவு செய்தார். அட்மிரல் முஹம்மது அம்ஜாத் கான் நியாசி மற்றும் இராணுவத் தளபதி, தங்கள் புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணத்தைத் மேலும் தொடர்வதற்கு, நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.யூ.எம்.என் மானகே டபிள்யூ.டபிள்யூ.வீ ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ பீ.எஸ்.சி, இரணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எம் பெர்னாண்டோ டபிள்யூ.டபிள்யூ.வீ ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ வீ.எஸ்.வீ யூ.எஸ்.பீ என்.டி.சி பீ.எஸ்.சி ஆகியோர் தளபதி அலுவலகத்தில் கலந்துரையாடலில் உடன் இருந்தனர். இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதானியை இராணுவத் தலைமையக பிரிகேட் தளபதி கேணல் டி.கே.ஆர் பெரேரா அவர்கள் வரவேற்றார்.

கடற்படைத் பிரதானி செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 28) புறப்படுவதற்கு முன்னர் நாட்டின் பல்வேறு இடங்கள், திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளைகள் மற்றும் கடற்படை கல்வியற் கல்லூரி ஆகியவற்றிற்கும் விஜயம் செய்ய உள்ளார்.