Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th April 2023 14:59:00 Hours

2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இராணுவ தளபதியின் செய்தி

இலங்கையர்களின் தனித்துவமான கலாசார விழாவான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைத்து சிவில் ஊழியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சஞ்சரிக்கும் தருணத்தில் தொடங்கும் புத்தாண்டு, நித்திய மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து சிங்கள, தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு கலாசார விழாவாகும்.

பாரம்பரிய மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் அதே வேளை, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் புதிய உத்வேகத்தையும் அனுபவத்தையும் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக சுப சம்பிரதாயங்கள் மற்றும் சமய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து இனங்களையும் சேர்ந்த இலங்கையர்களை ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைக்கும் இலங்கையின் திறனை இது பிரதிபலிக்கிறது.

கடந்த வருடம் இலங்கை இராணுவத்தின் வீரர்களுக்கும், முழு இலங்கை மக்களுக்கும் சவாலான ஆண்டாக அமைந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இராணுவத் தளபதி என்ற முறையில், அந்தக் கடினமான காலகட்டத்தின் அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு தொழில்முறை மற்றும் ஒழுக்கமான போர்வீரர்களாக நீங்கள் அனைவரும் ஆற்றிய பங்கிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின்படி, பாதுகாப்புப் படையினர் மற்றும் முழு நாட்டுப் பிரஜைகளின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் எமது நாடு தற்போது ஸ்திரமான நிலையில் உள்ளது என்றே கூற வேண்டும். இந்த ஆண்டு புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு அந்தத் தரப்பினரின் தியாகம் மற்றும் ஆர்வத்தின் விளைவாகும் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலான சூழ்நிலையிலும் இலங்கை இராணுவம் தாய் நாட்டையும் அங்கு வாழும் மக்களையும் பாதுகாத்து மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும். குறிப்பாக பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை இராணுவத்தின் வீரமிக்க வீரர்கள் செய்த தியாகங்களையும் பணிகளையும் முழு மக்களும் நன்றியுடன் நினைவுகூருவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

தாய்நாட்டின் இறையாண்மைக்காகவும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர் வீரர்களை நினைவு கூர்வதுடன், அவர்களின் முத்திக்காக பிராத்திக்கின்றேன். மேலும், போரின் போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மாவீரர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பதற்றமான சூழலை அமைதிப்படுத்த உங்கள் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், அதன் மூலம் முழு நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் தொழில்முறையை வெளிப்படுத்த முடிந்தது. மேலும், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு, தொழில்முறைத் திறன், பெருமைமிக்க மனப்பான்மை மற்றும் நல்ல ஒழுக்கத்தைப் பேணுவது அவசியமானது என்பதையும், இராணுவத் தளபதி என்ற வகையில் ஒரு குழுவை உருவாக்குவதே எனது நோக்கமாகும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

திறமைகள் நிறைந்த வீரர்கள், இராணுவம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலையும், ஒற்றுமையை பலமாகப் பயன்படுத்தி வெற்றிகரமாக முறியடித்துள்ளதுடன், எதிர்காலத்திலும் இதே அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புடனும் இராணுவத்தினராகிய நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்வது மிகவும் முக்கியம் என்பதை நான் சுட்டிக்காட்டுகின்றேன்.

நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரான அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தி தேசிய பாதுகாப்பை நிலைநாட்டுவதன் மூலம் அதியுயர் அரசியல் யாப்பு கட்டமைப்பையும் பாதுகாப்பதே இலங்கை இராணுவத்தின் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இராணுவத்தின் மீதான பொதுமக்களின் மதிப்பை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், ஆயுதப் படைகளின் நற்பெயரையும் கௌரவத்தையும் பாதுகாத்து உங்கள் பொறுப்புகளை ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் நிறைவேற்றவும், அரசின் வளங்களை விளைத்திறனாக பயன்படுத்தவும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

இறுதியாக, இராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் அனைத்து குடும்பங்களின் அன்பான உறுப்பினர்களுக்கும், சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த 2023 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

இராணுவத் தளபதி

லெப்டினன் ஜெனரல்

எச்எல்விஎம் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ