03rd May 2023 10:26:27 Hours
அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்க இராணுவ பசிபிக் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ் ஸ்மித், கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் அந்தோனி சி. நெல்சன், அமெரிக்க பசிபிக் தெற்காசிய நாடுகளின் பணிப்பாளர் மேஜர் ஆண்ட்ரூ தெருயா மற்றும் கெப்டன் பிரிட்னி டேவிஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (2) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தனர்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தற்போதைய பாதுகாப்பு பிரச்சினைகள், இருதரப்பு பயிற்சி வாய்ப்புகளையும் பலன்களையும் விரிவுபடுத்துதல் மற்றும் இரு அமைப்புக்களுக்கும் இடையிலான பொது விடயங்கள் தொடர்பாக இராணுவ தளபதி மற்றும் தூதுக்குழுவினர் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
கலந்துரையாடலின் முடிவில், இலங்கை இராணுவத்திற்கும் அவுஸ்திரேலியா அமெரிக்க இராணுவ பசிபிக் இராணுவத்தினருக்குமிடையில் நிலவும் நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் தொடர்புபடுத்தும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.
பொதுப்பணி பணிப்பாளர் நாயகமும் முதலாம் படையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ மற்றும் பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.