17th May 2023 06:17:35 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் முகாமைத்துவ பேரவை கூட்டம் திங்கட்கிழமை (மே 8) இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
பேரவையின் சம்பிரதாயங்களுக்கு இணங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இராணுவத் பதவி நிலை பிரதானி இக் கூட்டத்தின் ஆரம்ப அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் முகாமைத்துவ குழுவின் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் மரியாதையுடன் வரவேற்றார். தொடர்ந்து, பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத்தின் பயிற்சி பொறிமுறை தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார்.
குழு உறுப்பினர்கள் பின்னர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிற்சி மற்றும் மேம்பாடுகள், பொது நிர்வாக மற்றும் வழங்கல் தொடர்பான விடயங்களை விவாதித்தனர். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பிரச்சினைகளுக்கு நீண்ட மற்றும் குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்.
பிரதம அதிதியின் வருகையை தொடர்ந்து, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி வளாக உயிரிழந்த வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தினார்.
பின்னர், பதவி நிலை பிரதானி பேரவை உறுப்பினர்களுடன் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்சி வளாகத்தின் முன்னேற்றத்தைக் மீளாய்வு செய்தார்.
பொது பணிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ , ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிடபிள்யூஎ செனவிரத்ன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பயிற்சி பணிப்பாகத்தின் பணிப்பாளர், பிரிகேடியர் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ, கேணல் பாதீடு மற்றும் நிதி (பதில்) லெப்டினன் கேணல் எஸ்எம் முனசிங்க யூஎஸ்பீ மற்றும் இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிலவல் அதிகாரி பயிற்சி பிரிவு கட்டளை அதிகாரி கேணல் ஈடபிள்யூஆர்எஸ்பி எஹலபொல யூஎஸ்பீ யூஎஸ்எசிஜிஎஸ்சி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்...
பதவி நிலை பிரதானி வெளியேறுவதற்கு முன், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிதிகள் பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.