Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2023 17:13:15 Hours

சுதந்திர சதுக்க இறுதி ஊர்வலத்தில் இராணுவத் தளபதி பங்கேற்பு

அமரபுர பீடத்தின் அதி வண. தொடம்பஹல சந்திரசிறி மகாநாயக்க தேரரின் அரச மரியாதையுடனான இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. பிக்குகள், அனைத்து மத குருமார்கள், இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, கௌரவ. பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், அமைச்சர்கள், செயலாளர்கள், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் பதவி நிலை பிரதானி, அறங்காவல் சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் அனுதாபச் செய்தியினை வடமேல் மாகாண ஆளுநர் வாசித்ததுடன், பீடாதிபதிகளின் உரைகள் மற்றும் கௌரவ. பிரதமரின் உரை என்பன இடம் பெற்றன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டீயூ அவர்கள் பங்கேற்றபின் இறுதியில் துப்பாக்கி மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் அங்கு கலந்து கொண்ட பலருடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந் நிகழ்வின் போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி உட்பட பல முப்படை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.