31st January 2023 18:25:59 Hours
இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் ஹசன் அமீர் அவர்கள் செவ்வாய்க்கிழமை (31) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களைச் இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இராணுவத் தளபதி அவர்கள் அன்புடன் வரவேற்றதுடன், இலங்கை இராணுவம் மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினர்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பொதுவான கருத்துக்களை இருவரும் கலந்துரையாடினர்.
அத்துடன் இரு நாட்டின் இராணுவத்தினருக்கு இடையிலான உறவுகளை மென்மேலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் லெப்டினன் கேணல் ஹசன் அமீர் அவரின் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கு வழங்கப்படும் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பின் இறுதியில் இராணுவத் தளபதி மாலைத்தீவு பாதுகாப்பு ஆலோசகருக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கி இரு அமைப்புகளுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை அடையாளப்படுத்தினார்.