27th January 2023 23:30:38 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மோஹன் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தியத்தலாவ இலங்கை தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையில் வியாழன் (ஜனவரி 26) அன்று ‘நேர்மறையான சிந்தனை, சுதந்திரமான மனதுடன் பணிபுரிதல் மற்றும் நல்ல குடும்ப வாழ்க்கையை வாழுதல்’ என்ற தலைப்பில் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒரு மதிப்புமிக்க விரிவுரை நடைபெற்றது.
இந்த விரிவுரையை உளவியல் ஆலோசகர் திருமதி அமா திஸாநாயக்க நடத்தினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் குமார வனசிங்க அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் 127 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.