18th January 2023 18:10:47 Hours
மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் கதிர்காமம், கோதமிகமவில் அமைந்துள்ள 20 வது இலங்கை சிங்கப் படையணி முகாமுக்கு தனது முதல் விஜயத்தை சனிக்கிழமை (7) மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது படைத் தளபதியை 20 வது இலங்கை இராணுவ சிங்க படையணி கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் அஜித் திலகசிறி அவர்களால் வரவேற்கப்பட்டதுடன், படையினரால் இராணுவ பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
விஜயத்தை நினைவுகூறும் வகையில் முகாம் வளாகத்தில் மாங்கன்று ஒன்றினை படைத் தளபதி நாட்டினார். அதைத் தொடர்ந்து 20 வது இலங்கை இராணுவ சிங்க படையணி கட்டளை அதிகாரி அவர்கள் தனது வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
அப் படைத்தளபதி படையினருக்கு உரையாற்றுகையில் படையினரின் உயர் தரமான ஒழுக்கம் மற்றும் நிலையான பயிற்சியைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அவர் இராணுவ வீரர்களின் வசதிகள் குறித்தும் மற்றும் நடைபெற்று வரும் கட்டுமானங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அவர் வெளியேறுவதற்கு முன் படையலகில் உள்ள விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களையும் பதிவிட்டார். இலங்கை இராணுவ சிங்கப் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமலை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.