18th January 2023 18:00:47 Hours
உள்ளக கணக்காய்வு பணிப்பகம் வியாழன் (ஜனவரி 12) கணேமுல்லை கமாண்டோ படையணி தலைமையகத்தில் 12 அதிகாரிகள் மற்றும் 58 சிப்பாய்களின் பங்கேற்புடன் ‘கணக்காய்வுகளின் அவதானிப்புகளை குறைத்தல்’ என்ற தலைப்பில் ஆண்டின் முதல் விரிவுரையை நடத்தியது. இந்த விரிவுரையை உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் மேஜர் டபிள்யூ.ஜி.ஜே.எம்.டி.எஸ் ஜெயசிங்க நிகழ்த்தினார்.
நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் உள்ளக கணக்காய்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் மாலன் டி சொய்சா ஆகியோரின் பணிப்புரையின் பேரில் இவ் விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், 1330 அதிகாரிகள் மற்றும் 5169 சிப்பாய்களுக்கு இராணுவத்தின் உள்ளக கணக்காய்வு பணிப்பக நடைமுறைகள் பற்றிய அறிவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.