18th January 2023 05:13:00 Hours
ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெள்ளிக்கிழமை (13) பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் புதுமை சிந்தனை மற்றும் புத்தாக்கங்களுக்கான இராணுவ வீரர்களை அறிவூட்டுவதற்காக இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ பொதுப் பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகேவினால் இதற்கான முன்முயற்சியை மேற்கொண்டதன் பின்னர் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் நிபுணர்கள் குழுவினால் இந்த ஆலோசனை விரிவுரை அமர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வின் போது இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 93 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.
இந்த அமர்வுகளை ஆரம்பித்து வைக்கும் போது ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பக குழுவின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் கேணல் மஞ்சுள விஜேரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.