05th January 2023 11:53:49 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே புதன்கிழமை (4) பனாகொட இராணுவ வளாகத்தின் பரிசு வழங்கும் நிகழ்வுகளின் பின்னர், தனது கால அட்டவணையில் இருந்து சில நிமிடங்களை ஒதுக்கிக்கொண்டு இலேசாயுத காலாட் படையணியின் கண்டுல -1X' யாணையை பார்வையிட்டார்.
கண்டுல -IX' என பெயரிடப்பட்டுள்ள யானையானது 24 நவம்பர் 2022 மங்கள வாத்தியங்களுக்கு மத்தியில் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக வளர்க்கப்படுகின்றது.
இராணுவத் தளபதி அதன் பராமரிப்பாளரிடம் கலந்துரையாடியதுடன் யாணையினை தட்டிக்கொடுத்து அதற்கு உணவளித்தார்.
பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இலேசாயுத காலாட் படையணியின் கண்டுல -1X' யாணை ஆனது, தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க வயது வந்தவுடன் ஒப்படைக்கும் அடிப்படையில் வளர்க்கப்படுகின்றது. தேசிய மற்றும் இராணுவ விழாக்களின் போது வண்ணம் மற்றும் வரலாற்று கண்ணியத்தை சேர்க்க இது பயன்படுத்தப்படுகிறது.