Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2022 20:51:28 Hours

உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தினால் கணக்கியல் மற்றும் கணக்காய்வு தொடர்பாக படையினருக்கு விரிவுரை

இராணுவ உள்ளக கணக்காய்வு பணிப்பகம் கடந்த சில மாதங்களாக பல்வேறு இராணுவ நிறுவனங்களில் அரசு மற்றும் அரசு சாரா கணக்கியல் நடைமுறைகள் குறித்து இராணுவ வீரர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் தொடர் விரிவுரைகளை நடாத்தியது.

உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி II மேஜர் எல்.ஆர்.எம்.சி.டி ரத்நாயக்க அவர்கள் பனாகொடவில் உள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் 106 படையினருக்கு அண்மையில் விரிவுரைகளை வழங்கினார். ஜனவரி 2022 முதல் இதுவரை, 1330 அதிகாரிகளும் 5169 சிப்பாய்களும் குறுத்த அறிவினை பெற்றுள்ளனர்.

நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் உள்ளக கணக்காய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் மாலன் டி சொய்சா ஆகியோரின் பணிப்புரையின் பேரில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.