29th December 2022 21:22:06 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 26 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கெவில், வெற்றிலைக்கேணி மற்றும் மரதங்கேணி பிரதேசங்களின் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்துக்கள் அடங்கிய 100 உலர் உணவுப் பொதிகளை 2022 டிசம்பர் 17 அன்று 55 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் வழங்கினர்.
படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் மற்றும் கடைக்காடு புனித மாதா தேவாலயத்தின் பிரதான பாதிரியார் அருட்தந்தை அமல் ராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு திட்டத்திற்கான வழிகாட்டலை வழங்கினர்.
ஒவ்வொரு பொதியிலும் ரூ.5000 பெறுமதியான அரிசி, சத்துணவுகள், தானியங்கள், பால் மா பக்கெட்டுகள், சோயா மீட் பக்கெட்டுகள், சவர்காரம் சீனி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, டின் மீன் மற்றும் மசாலாப் பொருட்களை கொண்டிருந்தது. இந்த சமூகம் சார்ந்த திட்டத்தில் கட்டைக்காடு புனித மாதா தேவாலயத்தின் தலைமை பாதிரியார் வண. அருட்தந்தை அமல் ராஜ் மற்றும் 55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
வெற்றிலைக்கேணி கனநாத பிள்ளையார் ஆலய குருக்கள் கிராமசேவை அதிகாரிகள், கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் குழுவின் தலைவி திருமதி டென்ஷியா, திரு.எஸ்.ஜீவகுமார உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.