28th December 2022 18:09:15 Hours
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பல பரிமாண ஒருங்கிணைந்த ஸ்திரப்படுத்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை அமைதி காக்கும் படை குழு - 4 இன் பணியினை மினுஸ்மாவின் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் சி.ஜே. கீஸ் மத்திஜ்சென் அவர்கள் செவ்வாய்கிழமை (27) பாராட்டினார்.
இலங்கை அமைதி காக்கும் படை குழு - 4 இன் கட்டளை அதிகாரி கேணல் சந்தன ஜயமஹா, மாலியின் காவோ முகாமின் நுழைவாயிலில் வைத்து மினுஸ்மா படைத் தளபதியை அன்புடன் வரவேற்றதை தொடர்ந்து இலங்கை அமைதி காக்கும் படைக் குழுவின் -4 இல் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவரை அறிமுகப்படுத்தினார்.
அதன்பின்னர், லெப்டினன் ஜெனரல் சிஜே கீஸ் மத்திஜ்சென் இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு ஆற்றிய உரையில், கடந்த ஐந்து மாதங்களில் அவர்களின் அர்ப்பணிப்புப் பங்கைப் பாராட்டினார், மேலும் இலங்கை அமைதி காக்கும் படைக் குழு -4 தனது கடமைகளை, கிடல், அகுஇல்ஹோ மற்றும் டெஸ்ஸாலிட் பகுதிகளில் மிகச்சிறந்த அர்ப்பணிப்புடனும், நிபுணத்துவத்துடனும் மினுஸ்மா தளங்களுக்குத் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடத்தும் ஒரே குழுவாகச் செயற்பட்டதாக மேலும் கூறினார். "உயிர் அச்சுறுத்தும் அபாயங்கள் மற்றும் பாதகமான வானிலை மற்றும் நிலப்பரப்புகளுக்கு மத்தியிலும் 154 எரிபொருள் பவுசர்கள் மற்றும் 115 சரக்கு டிரக்குகளுக்கு பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில் 5346 கிலோமீட்டருக்கும் அதிகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் கடினமான சூழ்நிலையில் உபகரண வாகனத் தொடரணிகளுக்கு நீங்கள் பாதுகாப்பை வழங்குகிறீர்கள்." என்று மேலும் தனது உரையில் தெரிவித்தார்.
அவர் புறப்படுவதற்கு முன், லெப்டினன் ஜெனரல் சிஜே கீஸ் மத்திஜ்சென், மற்றும் கேணல் சந்தன ஜயமஹா இலங்கை அமைதி காக்கும் படைக் குழு - 4 படையினருக்கு படை தளபதியின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.