Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th December 2022 12:55:25 Hours

இராணுவ கல்வியற் கல்லூரியின் பட்டதாரிகள் தங்கள் இறுதி ஆய்வு ஜனாதிபதிக்கு

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கற்கைநெறிகளை பூர்த்தி செய்து சனிக்கிழமை (07) வெளியேறிய பயிளிலவல் அதிகாரிகள் இறுதி ஆய்வு விளக்கக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை (16) மாலை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு அதிமேதகு ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்கள் கேட்போர் கூடத்திற்கு வருகை தந்த பின்னர், பயிளிலவல் அதிகாரிகள், 'ரஷ்ய-உக்ரேனிய மோதல்கள் மற்றும் தெற்காசிய தாக்கங்கள்' என்ற கருப்பொருளில் தங்களினால் தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சிகளை சமர்ப்பித்தனர். அதன் பின்னர், ஆரம்ப நிகழ்விற்குப் பிந்தைய அமர்வு இடம்பெற்றதுடன் இதில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் ஏனைய உள்வாங்கப்பட்டவர்களும் தலைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பயிளிலவல் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தனர். இந்த இறுதி ஆய்வு விளக்கக்காட்சியானது அந்த பயிளிலவல் அதிகாரிகளை அதிகாரத்திற்கு நியமிக்க முதல் கட்டாய பகுதியாக காணப்படுகிறது.

பயிளிலவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தேசிய பணிகளில் தங்களை அர்ப்பணிப்பதற்காக மேலதிக அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி. வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு , மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் ஆகியோர் அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

பயிளிலவல் அதிகாரிகளின் விளக்கக்காட்சியின் முடிவில், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சஞ்சிகை மற்றும் அதன் மென்பொருள் பதிப்பின் வெளியீடு இலங்கை இராணுவ அகாடமியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி இன் அழைப்பின் பேரில் வெளியிடப்பட்டது. நிகழ்வின் முடிவைக் குறிக்கும் வகையில், சஞ்சிகையின் முதற்பிரதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளரின் பாரியார் திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியின் பாரியார் திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகிய சிரேஷ்ட அதிகாரிகளின் பாரியார்களும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர்.