09th December 2022 15:30:38 Hours
இந்தியாவில் காணப்படும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான கேணல் ரொலாண்டோ கோமஸ் இன்று (9) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
வருகை தந்த பாதுகாப்பு இணைப்பாளர் தற்போது ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கொள்கைக்கான ஜெனீவா மையத்தால் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரம் தொடர்பான 5 வது பாதுகாப்பு இணைப்பாளர் நோக்குநிலை பாடநெறியை பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பிலிப்பைன்ஸின் பாதுகாப்புத் இணைப்பாளர் இருவரும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பிணைப்புகளை நினைவுபடுத்தும் அதே வேளையில் பொதுவான விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வெவ்வேறு பரிமாற்ற நிகழ்ச்சிகளில் இரு நாட்டு ஆயுதப்படைகளின் பங்கேற்பு குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
அதற்கமைய இருவருக்குமிடையில் நினைவுப் சின்னங்கள் பரிமாறி கொண்டதுடன் சந்திப்பு நிறைவுற்றது.