16th November 2022 16:15:25 Hours
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 1 ம் பிரிவு மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் இராணுவ கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இப் போட்டியானது ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் கிரிக்கெட் மைதானங்களில் ஆகஸ்ட் 19 முதல் நவம்பர் 15 வரை நடைபெற்றது.
இலங்கை இராணுவ அணி 'பி' பிரிவு புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஒட்டுமொத்த போட்டித் தொடரில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை பீரங்கி படையின் சிப்பாய் கே.டபிள்யூ.கே.எஸ்.கே நாணயக்கார 66 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இராணுவ கிரிக்கெட் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் இறுதிப் போட்டியில் இராணுவ அணியின் வெற்றிக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கினர்.