10th November 2022 20:33:30 Hours
நிலவும் பொருளாதார நெருக்கடிகளின் நிலைமையை கருத்திற் கொண்டு நிவாரணங்கள் வழங்கும் நோக்கத்துடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தலைமையகத்தில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு வியாழக்கிழமை (10) உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது.
ஆளனி நிர்வாக பணிப்பகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு இலவச உலர் உணவுப் பொதிகளை வழங்கினார்.
இராணுவத் தளபதியை நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.
இந் நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசி லமாஹேவா டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.