Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st October 2022 21:17:34 Hours

இராணுவத்தினரின் முயற்சியில் 200 வறிய கிராமவாசிகளுக்கு நிவாரணப் பொதிகள்

நற்குண முன்னேற்ற அமைப்பின் (குண ஜய சதுட பதனம) திரு.குஷில் குணசேகர அவர்களின் அனுசரணையுடன் இராணுவத்தின் மனிதாபிமான செயற்பாடு மற்றும் ஆதரவுடன் குங்கன்குளம், மதுரங்கேணிக்குளம் மற்றும் கிழக்கு கிரிமிச்சியா பிரதேசங்களில் வசிக்கும் குறைந்த வருமான கொண்ட குடும்பங்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

அதற்கமைய, புதன்கிழமை (26) அப் பிரதேசங்களில் பணியாற்றும் 6 வது கஜபா படையணியின் படையினர் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை குங்கன்குளம் கலாசார நிலையத்திற்கு வரவழைத்து தலா 3500/= பெறுமதியான நிவாரணப் பொதிகளை 200 குடும்பங்களுக்கு விநியோகித்தனர்.

இந் விநியோக நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.