28th October 2022 16:24:44 Hours
14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேட்டின் 6 வது இலங்கை களபீரங்கி படையணியின் படையினர் செவ்வாய்கிழமை (25) சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகல்லை – நிட்டம்புவ பாதையில் வேரோடு சாய்ந்த மரமொன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இப் பணிகள் கம்பஹாவில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அதிகாரியொருவர் மற்றும் 10 படையினரை உள்ளடக்கிய குழுவினருடன் பொதுமக்கள் இணைந்து 'லக் சதொச' சந்திக்கு அருகில் வாகன போக்குவரத்துக்கு தடையாக இருந்த பாரிய மரத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.