28th October 2022 20:30:44 Hours
இந்தோனேசியா ஜகார்த்தாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படையின் கெப்டன் (பெ) ஏ.ஏ.சி கருணாசேன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வியாழக்கிழமை (27) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் நேரில் சந்தித்தார்.
கெப்டன் (பெ) ஏ.ஏ.சி கருணாசேன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த இராணுவத் தளபதி, நியமனத்தின் முக்கியத்துவத்தையும், நாட்டின் சிறந்த நலன்களுக்காக இராஜதந்திரியாக ஆற்றக்கூடிய கடமைகள் தொடர்பாக சுட்டி காட்டினார்.
இந்த சிநேகபூர்வ சந்திப்பின் இறுதியில், இராணுவத் தளபதியினால் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.