Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th October 2022 16:08:43 Hours

புதிதாக நிலையுயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இராணுவ தளபதி வாழ்த்து

73 வது இராணுவ ஆண்டு நிறைவை ஒட்டி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நிலை உயர்வு வழங்குவதாக இராணுவ செயலகம் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஐந்து சிரேஷ்ட பிரிகேடியர்களும் 73வது இராணுவ தினத்தில் (அக்டோபர் 10) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவிடமிருந்து அதிகாரச் சின்னத்தைப் பெறும் அரிய பாக்கியத்தைப் பெற்றனர்.

இதற்கமைய நிலையுயர்வு பெற்ற மதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ பீஎஸ்சி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணியகத்தின் பணிப்பாளர் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் ஜே ஏஆர்எஸ்கே ஜயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சி, 66 வது படைப்பிரிவு தளபதி இயந்திரவியல் காலாற் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்ஜே பிரியதர்ஷன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, 14 வது படைப்பிரிவு தளபதி கெமுணு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் ஜேஎம்ஆர்என்கே ஜயமான்ன ஆர்டப்ள்யூபீ மற்றும் இலங்கை பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடமிருந்து அதிகார வாளைப் பெற்றுக்கொண்டனர்.

புதிய நிலைக்கான சின்னங்களை கையளித்த இராணுவத் தளபதி, அவர்களை வாழ்த்தியதோடு அவர்களின் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். "உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இந்த நிலை உயர்வுக்கு தகுதியானது, இது உங்களின் அயராத மற்றும் அர்ப்பணிப்பான பாத்திரங்களுக்கு அங்கீகாரம், எனவே உங்கள் உன்னத பணியை தொடருங்கள்" என்று ஆலோசணை வழங்கினார்.