02nd October 2022 11:44:31 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெள்ளிக்கிழமை (30) தியத்தலாவ மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது பிரதான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காரிஸன் நகரில் அமைந்துள்ள கஜபா படையணிக்கு புதிய விடுமுறை விடுதி அமைப்பதற்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
கஜபா படையணி பேரவையின் சிரேஷ்ட உறுப்பினரும், 61 வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் அடிக்கல் நாட்டுவதற்கு வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வரவேற்றார்.
சமய வழிபாடுகளுக்கு பிறகு, அன்றைய பிரதம அதிதி, 'பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் புதிய விடுமுறை விடுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த உத்தேச விடுமுறை விடுதி கஜபா படையணியின் அனைத்து படையினர்களுக்கு பயன்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் கஜபா படையணியின் பேரவை உறுப்பினர்கள், கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.