26th September 2022 10:46:44 Hours
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தையொட்டி (செப்டம்பர் 23-30), கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப் பிரிவில் கீழ் உள்ள 231 வது பிரிகேடின் 11வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர், காத்தான்குடி முதல் மட்டக்களப்பு வரையான கடற்கரைப் பிரதேசங்களில் சனிக்கிழமை (24) சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.
இப் பணிகள் 23 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க மற்றும் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றன. இத் திட்டத்தில் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் Y.M.A.B யாப்பா அவர்களின் தலைமையின் கீழ் அவரது படையினரும் காத்தான்குடி பொதுமக்களும் இணைந்தனர்.
இதற்கிடையில், சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (23) மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 141 வது பிரிகேடின் படையினர் நீர்கொழும்பு கரையோரப் பகுதியில் சுமார் 3 கி.மீ. வரை அப்பிரதேசங்களில் சுத்தம் செய்வதற்கான பங்களிப்பை வழங்கினர்.
நீர்கொழும்பு மாநகர சபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு அதிகார சபையின் பணியாளர்களுடன் 141 வது பிரிகேட் கட்டளையின் கீழ் 6 வது இலங்கை பீரங்கி படையணி, 8 வது இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 2 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினர் பலரும் கலந்து கொண்டனர்.